மட்டக்களப்பு கடலில் நீராட சென்ற மாணவன் மாயம்!!



மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாடசாலை மாணவன் காணாமல்போயுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(08.02.2025) இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் சாமில் சனாஹி என்ற மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0/உங்கள் கருத்தை சொல்லுங்கள்

புதியது பழையவை